ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த மதூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (56), இவரது தம்பி கண்ணன் (50), முத்துவின் மகன் நித்தியானந்தம் (24) ஆகியோர் மீது கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன. அதேபோல் கோவிந்தவாடி அகரம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (32). இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேற்கண்ட 4 பேரும், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும்படி, எஸ்பி சுதாகர், கலெக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Related Stories: