திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச டிக்கெட்டுகள், வரும் 25ம் தேதி முதல் ஆன்லைனில் வழங்கப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் வரும் 25ம் தேதி (நாளை மறுதினம்) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். 26ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை ஒரு நாளைக்கு 8 ஆயிரம் டிக்கெட் வழங்கப்படும். இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கியவுடன், திருப்பதி சீனிவாசன் பக்தர்கள் ஓய்வறையில் இலவச தரிசன டிக்கெட் வழங்குவது நிறுத்தப்படும்.