காஞ்சிபுரம்: உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல், தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தன. இதையொட்டி, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான.ஆர்த்தி உத்தரவின்படி வட்டாட்சியர்கள் தலைமையிலான பறக்கும் படையினர் ஆங்காங்கே பறிமுதல் செய்கின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் பகுதியில் வட்டாட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர், நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காஞ்சிபுரத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.32,000 மதிப்பிலான 250 பித்தளை விளக்கு, 60 குங்குமச்சிமிழ் ஆகியவை கொண்டு சென்றார்.