கார் மோதி விபத்து ஐசிஎப் ஊழியர் பலி

திருவள்ளூர்: திருநின்றவூர் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்(59). ஐசிஎப்பில் வேலை பார்த்து வந்தார். இவரது மகன் பூமணிகண்டன்(31), திருநின்றவூரில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவர், தனது மனைவியை கோயம்பேட்டில் உள்ள மாமியார் வீட்டில் விட்டு விட்டு திரும்பி கொண்டிருந்தார். பூமணிகண்டன் காரை ஓட்டி செல்ல, தந்தை வெங்கடேசன் முன்புற சீட்டில் இருந்தார். பின்புற இருக்கைகளில், போட்டோ ஸ்டுடியோவில் பணியாற்றும் ஜெகதீஷ், கார்த்திக் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

வண்டலூர் வெளிவட்ட சாலையின் கீழே செல்லும் இணைப்பு சாலையில் சித்துக்காடு என்ற இடத்தில் சென்றபோது திடீரென நாய் குறுக்கே பாய்ந்தது. நாய் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கம்பத்தில் மோதியது. தலையில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெகதீஷ், கார்த்திக் ஆகியோர் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த வெள்ளவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: