சொல்லிட்டாங்க...

* இந்திய எல்லைகளில் புதிய போர் அபாய சவாலை நாம் எதிர்நோக்கியுள்ளோம். இதை புறக்கணிப்பது பாதுகாப்பானது அல்ல. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* விவசாயிகள் வாழ்வாதாரம் செழிப்பாக இருந்தால், நாட்டின் பொருளாதாரம் செழிப்பாக இருக்கும். - கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்

* அமைதிப்பூங்காவான தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையில் சில சமூக விரோதிகளின் செயல்பாடு பல்வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* சாலை விபத்துகளை குறைக்க வேண்டும் என்றால் விமான பைலட்டுகள் போன்று லாரி டிரைவர்களுக்கும் வேலை நேரத்தை நிர்ணயிக்க வேண்டும். - ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

Related Stories: