சென்னை: சென்னை வானகரத்தில் அப்போலோ மருத்துவமனையில் விபத்து, தீக்காயம், மாரடைப்பு, பக்கவாதம், மகப்பேறு போன்றவற்றிற்கு அவசர நிலையில் சிகிச்சை அளிக்க, மனித உடல் மாதிரிகளை வைத்து சிகிச்சை அளிப்பதை தெரிந்துகொள்ள மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கற்றுத்தரும் சிமுலேசன் மையம் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிமுலேசன் மையத்தை திறந்து வைத்தார். அப்போலோ மருத்துவ குழுமத் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.