சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,50,159 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,647 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,48,688 ஆக உள்ளது. இதேபோல், நேற்று சிகிச்சை பெற்று வந்த 1,619 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.