புதுடெல்லி: ‘இந்திய எல்லைகளில் புதிய போர் அபாய எச்சரிக்கை ஏற்பட்டுள்ளது. இதை புறக்கணிப்பது பாதுகாப்பானதல்ல,’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். இந்திய-சீன எல்லையில் கடந்தாண்டு பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் லடாக், உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசம் ஆகிய எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே சீனா 10 ராணுவ விமான தளங்களை உருவாக்கியுள்ளது.