பஞ்சாப் அணிக்கு 186 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

துபாய்: பஞ்சாப் அணிக்கு 186 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

Related Stories: