தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வருகிற அக்.6ம் தேதி தசரா விழா கொடியேற்றம் நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் விழா அக். 16ம் தேதி சூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு தசரா விழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தசரா விழாவுக்கு பக்தர்களை காப்பு கட்ட அனுமதிக்கக் கோரியும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அருகே பா.ஜ.வினர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர்.