சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், வடகிழக்கு பருவ மழை காலங்களில் அதிகம் பாதிக்கக்கூடிய பகுதிகளான சென்னை வேப்பேரி, கத்திபாரா, ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு, ரெட்டேரி, அரும்பாக்கம், வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளிட்ட பகுதிகளில் மாபெரும் தூர்வாரும் பணி நடக்கிறது. இதன்மூலம் இந்த பகுதியில் உள்ள மழைநீர் வடிகால், பெரிய வடிகால்கள், சிறு மற்றும் பெரிய பாலங்களின் நீர் வழித்தடங்கள், மழைநீர் செல்லும் துவாரங்கள், வாகன சுரங்கப்பாதை, நீர்சேகரிக்கும் கிணறு போன்றவை தூர்வாரி சுத்தம் செய்யப்பட உள்ளன.