பிரயாக்ராஜ்: அகில பாரதிய அகடா பரிஷத் அமைப்பின் தலைவர் ஆச்சார்யா நரேந்திர கிரி மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அலகாபாத்தில் உள்ள மடத்தில் நேற்று நரேந்திர கிரி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதன் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார் 5 பக்க தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர். அதில் குறிப்பிடப்பட்டிருந்த படி முக்கிய சீடர்களில் ஒருவரான ஆனந்த் கிரி மற்றும் சீடர்கள் சந்தீப் திவாரி, அதயா திவாரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.