பாலக்காடு : கேரளா-தமிழக எல்லையான பாலக்காடு-வாளையார் இடையே கஞ்சிக்கோடு தொழிற்பேட்டை அமைந்துள்ளது. கஞ்சிக்கோட்டை அடுத்த வலியேறி, குரடிக்காடு, கல்லேப்பிள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று காலை குட்டி யானைகள் உட்பட 17 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து தோட்டப்பயிர்களான தென்னை, வாழை, பாக்கு, ஊடுப்பயிர்கள் ஆகியவற்றை துவம்சம் செய்தன.