புதுடெல்லி: குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானி தலைமையிலான அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளி துறைமுகம் உட்பட குஜராத், கோவா, கேரளா, ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் உள்நாட்டு துறைமுகங்களை நிர்வகித்து வருகிறது. அந்த வகையில், ஆந்திராவின் கங்காவரம் துறைமுகத்தின் 31.5 சதவீத பங்குகளை சுமார் ரூ.2000 கோடிக்கு கடந்த மார்ச்சில் அதானி நிறுவனம் வாங்கியது. இத்துறைமுகத்தில் மீதமுள்ள பங்கில் 10.4 சதவீத பங்குகளை ஆந்திரா அரசு வைத்திருந்தது.