திருமலை: ஆப்கானிஸ்தானில் இருந்து விஜயவாடாவுக்கு கடத்திய ரூ.9 ஆயிரம் கோடி ஹெராயினை குஜராத் துறைமுகத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விஜயவாடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் கந்தகாரில் உள்ள ஹசன் ஹூசைன் லிமிடெட் நிறுவனத்தின் கண்டெய்னர், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சத்தியநாராயணபுரத்தில் உள்ள ஆஷி டிரேடிங் நிறுவன முகவரிக்கு முகத்துக்கு பயன்படுத்தும் டால்கம் பவுடர் இறக்குமதி செய்யும் கப்பலில் நேற்று குஜராத் துறைமுகத்துக்கு வந்தது.