சென்னை: ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக பாம அறிவித்தது. கடந்த தேர்தலின்போது அதிமுகவினர் ஒழுங்காக ஒத்துழைப்பு தரவில்லை. சொந்தக் கட்சிக்காரர்களை கூட கட்டுப்படுத்த அதிமுக தலைவர்களால் முடியவில்லை. அவர்களுடன் கூட்டணி வைத்தால் நாம் வெற்றி பெற முடியுமா. தற்போதுள்ள சூழ்நிலையில் அவர்களுடன் கூட்டணி வைத்தால் நமக்கு சரி வராது. குறிப்பிட்ட சீட் கிடைக்காது அதனால் தனித்தே போட்டியிடலாம் என்று முடிவு எடுத்ததாக பாமக தரப்பில் விளக்கம் தரப்பட்டது. அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாமக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளதால் எந்த இழப்பும் இல்லை என்று தெரிவித்தார். எனினும், அதிமுகவில் உள்ள சில தலைவர்கள் பாமக, மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் மறைமுகமாக அழைப்பு விடுத்தனர்.