சண்டிகர்: ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யுமாறு பஞ்சாபின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி ஒரு சாமானியனை முதலமைச்சராக்கி உள்ளதாக சரண்ஜித் சிங் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் மின்கட்டணத்தையும், தண்ணீர் கட்டணத்தையும் காங்கிரஸ் அரசு ரத்து செய்யும் என்றும் சரண்ஜித் சிங் அறிவித்துள்ளார்.