திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் ஊராட்சியில் கடந்த 12ம்தேதி நடந்த முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் கால் சவரன் மோதிரம் முதல் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நேற்று 2வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. தாசில்தார் பரிமளா முன்னிலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் டோக்கன் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.