பெரம்பூர்: சென்னை மாநகராட்சி, 6-வது மண்டலத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பு, பட்டாளம், ஓட்டேரி, பேசின்பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் ஏராளமான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேற்கண்ட மண்டலத்தில் மீண்டும் மக்களிடையே தொற்று பரவலை தடுக்க போதிய விழிப்புணர்வு ஏற்படும் வகையில் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், படாளம் மார்க்கெட் பகுதியில் நேற்று மாலை புளியந்தோப்பு காவல்துறை துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, உதவி கமிஷனர் அழகேசன், சுகாதார துணை ஆணையர் மணிஷ் நாராயணன் பரே, செயற்பொறியாளர் செந்தில்நாதன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.