வேளச்சேரி: பெசன்ட்நகர் எலியட்ஸ் கடல்கரையில், எந்தெந்த பகுதிகள் ஆழமானவை, கடலில் குளிக்க தடை செய்யப்பட்ட பகுதிகள் எவை என்பது குறித்து விழிப்புணர்வு எச்சரிக்கை பதாகைகளை போலீசார் வைத்துள்ளனர். சென்னை நகரில் மெரீனா, பெசன்ட்நகர் எலியட்ஸ் பீச் உள்ளிட்ட பல்வேறு கடற்கரை பகுதிகளுக்கு வரும் இளைஞர்கள், கடலுக்குள் இறங்கி குளிக்கின்றனர். இதில் பலர் நீச்சல் தெரியாததாலும், ஆழமான பகுதிக்கு செல்வதாலும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்து செல்வதால் பலியாகின்றனர். குறிப்பாக, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 43 பேர் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.