சென்னை: தமிழ்நாட்டுக்கு 50 லட்சம் தடுப்பூசி கேட்டு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்டோபர் 31க்குள் 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் அதிக அளவில் தடுப்பூசி போடப்படுவதை சுட்டிக்காட்டி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.