மேல்மலையனூர் : விழுப்புரம் மாவட்டம் வளத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்ட சோதனைச்சாவடியான ஞானோதயம் சோதனைச்சாவடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டெய்னர் லாரியில் 573 கேன்களில் கடத்தி செல்லப்பட்ட 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 ஆயிரத்து 50 லிட்டர் எரி சாராயம் வாகன தணிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டதில் மத்திய பிரதேசத்திலிருந்து முகமது இக்ராம் என்பவர் டாரஸ் லாரியில் எரி சாராயத்தை புதுச்சேரி மாநிலத்துக்கு கடத்தியது தெரியவந்தது.