டெல்லி: மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடக்கோரிய மனு குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. யோசனைகளை தெரிவிக்க சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.