பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயர் திடீரென வெடித்ததில் தறிகெட்டு ஓடி, சாலையோர கோயிலுக்குள் புகுந்தது. இதில் ஒருவர் காயமடைந்தார். 2 பைக்குகள் சேதமாகின. திருவள்ளூரை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர், நேற்று கரையான்சாவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி காரில் புறப்பட்டார். பூந்தமல்லி டிரங்க் சாலையில் சென்றபோது, காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் நின்றிருந்த 2 பைக்குகளை இடித்து தள்ளியபடி, அங்குள்ள சாலையோர கோயிலுக்குள் புகுந்தது.