சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக தேனிக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக சென்னை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் காலை எழும்பூர் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி காத்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் குழுவினர் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் பையுடன் ரயிலில் வந்து இறங்கினர். அவர்களை பிடித்து விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர்.