தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்யும்

சென்னை: வளி மண்டல மேலடுக்கு மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய் யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஈரப்பதம் உறிஞ்சப்பட்டதால், தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவியது. இதனால், ஏற்பட்ட வெப்ப சலனத்தால் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதன் தொடர்ச்சி நீடித்து வருவதால், தமிழகத்தில் தற்போதும் வெப்ப சலனம் காணப்படுகிறது. மேலும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் நீடிப்பதால் கனமழைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதையடுத்து,  புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வட மாவட்டங்களை பொறுத்தவரையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன்  மழை பெய்யும்.

Related Stories: