அந்தியூர்: கர்நாடக மாநிலத்தில் இருந்து காய்கறி வேனில் கடத்திய 800 கிலோ புகையிலை பொருட்களை பர்கூர் மலைப்பகுதியில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடக மாநிலம் கொள்ளேகாலிலிருந்து கோவை வந்த ஒரு காய்கறி வேனை நிறுத்தி சோதனையிட்டனர்.