கொடைக்கானல்: கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு கடந்த சில வாரங்களாக வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. விடுமுறை நாளான நேற்று, கொடைக்கானலில் வனப்பகுதி, முக்கிய சுற்றுலா இடங்களுக்குச் செல்லும் வழியில் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சித் துறை இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.