லக்னோ: ‘உத்தர பிரதேசத்தில் கடந்த நாலரை ஆண்டு பாஜ ஆட்சியில், ஒரு கலவரம் கூட நடக்கவில்லை,’ என்று இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் கடந்த 2017ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். தற்போது அவர் நாலரை ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ளார். இம்மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால், அதில் மீண்டும் வெற்றி பெறுவதற்கான பிரசாரத்தை பாஜ இப்போதே முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில், தனது நாலரை ஆண்டு கால ஆட்சியின் சாதனை புத்தகம் வெளியிட்டு அவர் கூறியதாவது: