திருமலை: ஆந்திராவில் மின்னல் தாக்கி குடிசை வீடு எரிந்ததில் நிலத்தை விற்று வைத்திருந்த ரூ.20 லட்சம் கருகியது. ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், சிந்தலப்பூடி மண்டலம், குருபடா கூடத்தை சேர்ந்தவர் கல்லா கிருஷ்ணவேணி. இவரது மகன் மகேஷ். இருவரும் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ேநற்று முன்தினம் இரவு மின்னல் தாக்கி கிருஷ்ணவேணியின் குடிசை தீப்பிடித்து எரிந்தது.