ஊட்டி:வார விடுமுறை நாளான நேற்று ஊட்டி அருகேயுள்ள பைக்காரா அணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொள்ள குவிந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மேலும், சுற்றுலா பயணிகள் நீலகிரி வருவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 23ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்க அனுமதிக்கப்பட்டது. மேலும், சுற்றுலா பயணிகள் வருவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது நாள் தோறும் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.