தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த திருமல்வாடி செம்மனஹள்ளியைச் சேர்ந்தவர் ராஜா(43). இவரது உறவினரான முனிராஜ் மகன் ரமேஷ்(23). இவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி காதல் ஜோடி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது. இதுகுறித்து மாரண்டஹள்ளி போலீசார் காதல் ஜோடியை அழைத்து விசாரித்தனர். அப்போது, பெற்றோருடன் செல்வதாக இளம்பெண் கூறினார். இதையடுத்து, அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.