மதுரை: மதுரை, பைபாஸ் ரோடு பகுதியில் மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகம் உள்ளது. இப்பகுதியில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்திற்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணி சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. மதுரை செக்கானூரணி போக்குவரத்து பணிமனைக்கு கிளை செயலாளராக ஏற்கனவே இருந்த முருகனை மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்தனர். இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து சங்க அலுவலகத்திலேயே முன்னாள் அமைச்சர் உதயகுமார், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா முன்னிலையில் கோஷம் எழுப்பினர். பணத்தை பெற்றுக் கொண்டு பதவி வழங்கியதாக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.