அதிமுக ஆட்சியில் அடிமுதல் நுனிவரை கொள்ளை மாஜி அமைச்சர்களின் வீடுகளில் சோதனை மூலம் ஊழல் நிரூபணம்: சேலத்தில் திருமாவளவன் கருத்து

சேலம் : சேலம் அஸ்தம்பட்டியில், சேலம் கோட்ட எல்ஐசி எஸ்சி., எஸ்டி ஊழியர் நலச்சங்க கட்டிடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: வேளாண் சட்டத்தை திரும்ப பெறவும், நீட் தேர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி வரும் 20ம் தேதி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஜனநாயக சக்திகள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். விசிகவினர் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி, தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

 அதிமுக ஆட்சியில் அடி முதல் நுனி வரை ஊழல் நடந்திருப்பதாக அப்போதே பேசப்பட்டது. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடந்து வரும் சோதனைகள் மூலம், தற்போது அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சோதனை குறித்து அதிமுக தலைமையே பெருமளவில் விமர்சனம் செய்யவில்லை, எதிர்ப்பும் காட்டவில்லை. ஆதாரம் இல்லாமல் இருந்தால், அவர்கள் போராட்டம் நடத்தியிருக்கக் கூடும். எனவே இதில் இருந்தே, திமுக அரசு எடுக்கும் நடவடிக்கை நியாயமானது என அனைவருக்கும் புரியும். இவ்வாறு தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Related Stories: