மதுரை: மதுரையில் திருநங்கைகள் இணைந்து நடத்தும் உணவகம் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சமூகத்தில் திருநங்கைகள் மீதான பார்வையில் மாற்றம் வர வேண்டும் என்ற நோக்கத்துடன் மதுரை கோரிபாளையத்தில் உணவகத்தை திறந்துள்ளார் திருநங்கை ஜெயசித்ரா. 10 ஆண்டுகளுக்கும் மேலாக உணவுத்துறையில் கிடைத்த பட்டறிவை கொண்டு டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் உணவகத்தை திறந்துள்ளார். உணவு சமைக்கவும், பரிமாறவும் 12 திருநங்கைகள் இந்த உணவகத்தில் பணியாற்றுகின்றனர். திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனம் நடத்தி வரும் பிரியா பாபு ஆலோசனையின் பேரில் உணவகத்தை திறந்திருக்கிறார் ஜெயசித்ரா.