×

மதுரையில் திருநங்கைகள் இணைந்து நடத்தும் உணவகம்!: பொதுமக்கள் வரவேற்பு

மதுரை: மதுரையில் திருநங்கைகள் இணைந்து நடத்தும் உணவகம் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சமூகத்தில் திருநங்கைகள் மீதான பார்வையில் மாற்றம் வர வேண்டும் என்ற நோக்கத்துடன் மதுரை கோரிபாளையத்தில் உணவகத்தை திறந்துள்ளார் திருநங்கை ஜெயசித்ரா. 10 ஆண்டுகளுக்கும் மேலாக உணவுத்துறையில் கிடைத்த பட்டறிவை கொண்டு டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் உணவகத்தை திறந்துள்ளார். உணவு சமைக்கவும், பரிமாறவும் 12 திருநங்கைகள் இந்த உணவகத்தில் பணியாற்றுகின்றனர். திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனம் நடத்தி வரும் பிரியா பாபு ஆலோசனையின் பேரில் உணவகத்தை திறந்திருக்கிறார் ஜெயசித்ரா.

ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அருகே உணவகம் அமைந்திருப்பதால் குறைந்த விலையில் உணவு வழங்கி வருகிறார் திருநங்கை ஜெயசித்ரா. காலை, இரவில் சிற்றுண்டி, பிற்பகலில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்படுகின்றன. திருநங்கைகள் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்ற விரைவில் மற்ற பகுதிகளிலும் கிளைகள் தொடங்க வேண்டும் என்பதே ஒரே இலக்கு என்று ஒருமித்த குரலில் ஒலிக்கின்றன இங்கு பணியாற்றும் திருநங்கைகள். முன்னேற்றத்தை முன்னிறுத்தி உத்வேகமாக களமிறங்கிய திருநங்கைகளுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Tags : Madurai , Madurai, Transgender, Restaurant
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...