கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே பசுமாட்டின் 2 காதுகள் மற்றும் வாலை அறுத்து துண்டித்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அளக்குடி கிராமம், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(51), விவசாய தொழிலாளி. இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று அப்பகுதியில் மேய்ச்சலுக்காக சென்றது.
அப்போது அப்பகுதியில் அரசு நிலத்தை அபகரித்து வைத்துள்ள பகுதிக்குள் சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த 5 பேர் ஒன்றாகச் சேர்ந்து பசுமட்டை பிடித்து கீழே தள்ளி அரிவாளை எடுத்து இரண்டு காதுகளை அறுத்து துண்டித்தனர். பின்னர் வாலையும் அறுத்து துண்டித்தனர். பின்னர் மாட்டை விரட்டி அடித்துவிட்டனர். அந்த பசு மாடு ரத்தம் சொட்டச் சொட்ட நேற்று அண்ணாதுரை வீட்டிற்கு கத்திக் கொண்டே வந்தது.