சென்னை: உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி என புதிய ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார். என்னால் முடிந்த அளவிற்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் முன்னேற்றத்திக்காக உழைக்க உள்ளேன். தமிழகத்தில் பணியாற்றுவது என்பது சவாலுக்கு அப்பாற்பட்டது- தமிழகத்திற்கு சேவையாற்றுவது தான் முதல் பணி என்று புதிய ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.