செங்கல்பட்டு: தமிழக அரசு ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்க, பல்வேறு வகைகளில் செயல்பட்டு, அவர்களது பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் எதிர்கால நலனை சமூதாயத்தில் மேம்படுத்துகிறது. அதில், அரசின் வளர்ப்பு பராமரிப்பு திட்டம் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதையொட்டி, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழும அலுவலகம் செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்ல வளாகத்தில் செயல்படுகிறது. இதில் அரசு பெண்கள் காப்பகத்தில் தங்கி பயின்று வந்த 11 வயது சிறுமி, செங்கல்பட்டு மாவட்டம், சென்னை ஆதம்பாக்கத்தில் வசிக்கும் தம்பதியிடம் வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் கீழ், மாநில அரசு தத்து வளர்ப்பு மையத்தில் பதிந்து, பதிவு மூப்பு அடிப்படையிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தின் முறையான நடைமுறைகளை கடைபிடித்து, ஒப்படைக்கப்பட்டார்.