சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3வது ரயில் பாதை அமைக்கும் பணி, ரூ.256 கோடி செலவில் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில் - கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி - தாம்பரம் என மூன்று கட்டங்களாக நடைபெற்றது. மேலும், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் இணைத்து வண்டலூர் பகுதியில் சிக்னல் மற்றும் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்து, நேற்று காலை தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3வது ரயில் பாதையில் ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.