இரு மாநில நதி நீர் பிரச்னை தமிழகம்-கேரளா பேச்சுவார்த்தை

திருவனந்தபுரம்: தமிழகம் - கேரளா இடையே முல்லை பேரியாறு, பரம்பிக்குளம்- ஆழியார், நெய்யாறு உட்பட பல நதிநீர் பங்கீடுகள் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது ெதாடர்பாக இரு மாநில முதல்வர்கள்  இடையேயும், அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இந்நிலையில், இரு மாநில நதிநீர் பங்கீடு ெதாடர்பாக நேற்று தமிழகம் மற்றும் கேரள தலைமை செயலாளர்களுக்கு இடையில் காணொலி மூலமாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இரு மாநில தலைமை செயலாளர்கள், நீர்ப்பாசனத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: