திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆன்லைன் மூலம் ரூ300 டிக்கெட் பெற்ற பக்தர்கள், இலவச தரிசன டிக்கெட் பெற்ற 2 ஆயிரம் உள்ளூர் பக்தர்கள் மட்டுமே தற்போது சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு தரிசனம் செய்த பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப கோயிலில் உள்ள உண்டியல்களில் நகை, பணம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.