சென்னை: பிரபல கவிஞரும், எழுத்தாளருமான பிரான்சிஸ் கிருபா நேற்று இரவு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த பத்தினிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் எழுத்தாளர், கவிஞர் பிரான்சிஸ் கிருபா. தமிழ் நவீன கவிதை எழுத்தாளராக இலக்கிய உலகில் அறியப்படும் பிரான்சிஸ் கிருபா நேற்று இரவு சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், கன்னி என்ற நாவலையும் எழுதியுள்ள இவர் பள்ளிப்படிப்பை மட்டுமே பயின்றவர்.