டெல்லி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் அரசாணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆட்சியர் அலுவலகம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அரசாணை செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.