குளித்தலை: குளித்தலை திருச்சி கரூர் மெயின் ரோட்டில் தனியார் வங்கி எதிரே விபத்தை ஏற்படுத்த கூடிய தாழ்வான நிலையில் சாலையின் குறுக்கே தொங்கும் மின் கம்பிகளை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் குளித்தலை திருச்சி கரூர் மெயின் ரோட்டில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியின் எதிரே வாய்க்கால் ஓரம் கம்பம் ஒன்று உள்ளது. ஏராளமான இணைப்புகள் உள்ளன. இதனால் குறுக்கே மின் கம்பிகள் உள்ளது. மின் கம்பிகள் பல நாட்களாக தாழ்வான நிலையில் சாலையின் குறுக்கே செல்கிறது. திருச்சி மார்க்கத்தில் இருந்தும், கரூர் மார்க்கத்திலிருந்தும் பயணிகள் பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.