34,403 பேருக்கு கொரோனா.. 320 பேர் பலி... : இந்தியாவில் 3வது அலை தொடங்கியதா ? அச்சத்தில் மக்கள்!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.44 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.31 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 34,403 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,33,81,728 ஆக உயர்ந்தது.

* புதிதாக 320 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,44,248 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 37,950 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,25,98,424 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,39,056 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் இதுவரை 77,24,25,744 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 63,97,972 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

* இந்தியாவில்குணமடைந்தோர் விகிதம் 97.64% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.03% ஆக குறைந்துள்ளது.

Related Stories: