கீழடி அருகே அகரத்தில் முதன்முறையாக ஒரே குழியில் 3 உறைகிணறுகள் பானைகளுடன் கண்டுபிடிப்பு

திருப்புவனம்: கீழடி சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 இடங்களில் தலா எட்டு குழிகள் வரை தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. அகரத்தில் ஒரே குழியில் மூன்று உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் தலா மூன்று அடுக்குகளுடன் கிடைத்துள்ளன. ஒரு உறைகிணற்றினுள் தண்ணீர் எடுக்க பயன்படுத்திய பானைகளும் கிடைத்துள்ளன. இதில் ஒரு பானை சிதிலமடைந்தும் மற்றொரு பானை முழுமையாகவும் உள்ளன. அருகில் தோண்டப்பட்ட மற்றொரு குழியிலும் சிதிலமடைந்த உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.

ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் இதுவரை 7 உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வில் இதுவரை மொத்தம் 20 உறைகிணறுகள் வரை கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அகரத்தில் தொடர்ச்சியாக உறைகிணறுகள் கிடைத்து வருகின்றன. இது இப்பகுதியில், வீடுகள் தோறும் உறைகிணறுகள் வைத்திருந்ததற்கு சான்றாக கருதப்படுகிறது.

Related Stories: