திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஸ்மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்தார். இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உதயாஸ்தமன பூஜை, படி பூஜை, களபாபிஷேகம் உள்பட பூஜைகள் நடைபெறும். 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.