திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மளிகை கடையில், ரூ.40 ஆயிரம் திருடிய, ரெகுலர் கஸ்டமரை, போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்து மேல்நல்லாத்தூரில் மளிகை மற்றும் காய்கறி கடை நடத்தி வருபவர் சுப்புகண்ணன். திருச்சி செல்வதற்காக தனது கடையை மணவாள நகரை சேர்ந்த தனது மைத்துனர் பிரவீன்குமார் (20) என்பவரிடம் விட்டு சென்றுள்ளார். இதை தொடர்ந்து பிரவின்குமார் வியாபாரம் நடத்தி வந்துள்ளார். கடந்த 4 நாட்களாக பிரவீன்குமார், கடையில் விற்பனை செய்து 40 ஆயிரம் பணம் மற்றும் ஏடிஎம், கார்டு, பான் கார்டு ஆகியவற்றை ஒரு பச்சை நிற பையில் வைத்து கல்லாவில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் மலலை திடீரென மாலை 4 மணியளவில், பணம் வைத்திருந்த பையை காணாமல் பிரவீன்குமார் அதிர்ச்சியடைந்தார்.