திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தவறான உறவுக்கு இடையூறாக இருந்த மகனை கொன்ற தாய், காதலனுடன் கைது செய்யப்பட்டார். சோழவரம் அடுத்த நெடுவரம்பாக்கம் பகுதியை சேர்ந்த துர்கா என்பவரே கொடூர செயலில் ஈடுபட்டவர். இவருக்கும் நெடுவரம்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியரான கோபால் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தவறான உறவாக மாறியது. இது 9ம் வகுப்பு படித்த துர்காவின் மூத்த மகன் சூர்யாவுக்கு தெரியவரவே அதிர்ச்சியடைந்த துர்கா, காதலனுடன் சேர்ந்து மகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார்.